
ஹக்மன – தெனகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஹக்மன பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த கைதின்போது 6 கிராம் மற்றும் 470 மில்லி கிராம் ஹெரோயினோடும் ஒருவர் நேற்று (03) காலை கைது செய்யப்பட்டதோடு, விசாரணைகளின் போது அவர் வெளிப்படுத்திய தகவலின் பேரில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டை சோதனை செய்ததில், 3 கிராம் மற்றும் 150 மில்லி கிராம் ஹெரோயின் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்த நிலையில் மற்ற ஏழு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 38 வயதுடைய தெனகம, ஹக்மன, கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தெய்யந்தரை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று (04) தெய்யந்தரை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.