
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை என லாஃப்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நாட்டில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் 3,985 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரினுடைய 1,595 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.