
நூருல் ஹுதா உமர்
இலங்கையினுடைய புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம், எகிப்து மற்றும் இத்தாலி, கியூபா, பங்களாதேஷ் மற்றும்பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்களும் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தின் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று (07) சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டனர்.
அத்தோடு, இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையின் மேம்படுத்துதல் மற்றும் கைத்தொழில் பேட்டை ஸ்தாபித்தல், கனிமத் துறைகளின் அபிவிருத்தி மற்றும் கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்திகள் மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளில் அவர்கள் நியமிக்கப்பட உள்ள நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் குறித்த புதிய தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களினை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.