தேங்கி கிடக்கும் 1 இலட்சம் வாகன பதிவுத் தகடுகள்: மோட்டார்...
News
தேங்கி கிடக்கும் 1 இலட்சம் வாகன பதிவுத் தகடுகள்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை!
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட, ஆனால் வாகன உரிமையாளர்களால் இன்னும் பெறப்படாத சுமார் ஒரு இலட்சம் வாகனப் பதிவுத் தகடுகள், தற்போது அதன் வளாகத்தில் குவிந்து கிடப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது.
நாராஹேன்பிட்டியவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும், கொழும்பு மாவட்டம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாவட்ட அலுவலகங்களிலும் உரிமை கோரப்படாத பதிவுத் தகடுகளின் பெரும் இருப்பு குவிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பதிவுத் தகடுகளுக்கு விண்ணப்பித்து, இன்னும் அவற்றைப் பெறாத அனைத்து வாகன உரிமையாளர்களும், ஜூன் 30, 2026-க்கு முன்னர் தங்களது தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் உள்ள உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்கள் அல்லது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கிளை அலுவலகங்களிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கோ அல்லது விசாரணைகளுக்கோ 011-2033333 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வாகனப்பதிவுத்தகடுப்பிரிவை தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாராஹேன்பிட்டியவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும், கொழும்பு மாவட்டம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாவட்ட அலுவலகங்களிலும் உரிமை கோரப்படாத பதிவுத் தகடுகளின் பெரும் இருப்பு குவிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பதிவுத் தகடுகளுக்கு விண்ணப்பித்து, இன்னும் அவற்றைப் பெறாத அனைத்து வாகன உரிமையாளர்களும், ஜூன் 30, 2026-க்கு முன்னர் தங்களது தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் உள்ள உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்கள் அல்லது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கிளை அலுவலகங்களிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கோ அல்லது விசாரணைகளுக்கோ 011-2033333 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வாகனப்பதிவுத்தகடுப்பிரிவை தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.