New Updates! Fresh news just arrived.

லண்டனில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் 11 ஆயிரம் கோடி...

News

லண்டனில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் 11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

September 15, 2026 10:49 am
லண்டனில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் 11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் 11 ஆயிரம் கோடி இந்திய ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

இங்கிலாந்து, லண்டன் நகரில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11ஆயிரம் கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now