11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: இளைஞன் கைது
News
11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: இளைஞன் கைது
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுளிபுரம் பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
நேற்று (ஏப்ரல் 15) மாலை 5:00 மணியளவில், சுளிபுரம், வேறம் முல்லைப் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த 26வயதுடய இளைஞனால் கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
நடவடிக்கை:
பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு சந்தேக நபரான குறித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய நிலை:
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காகவும், மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பூ.லின்ரன்
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
நேற்று (ஏப்ரல் 15) மாலை 5:00 மணியளவில், சுளிபுரம், வேறம் முல்லைப் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த 26வயதுடய இளைஞனால் கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
நடவடிக்கை:
பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு சந்தேக நபரான குறித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய நிலை:
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காகவும், மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பூ.லின்ரன்