New Updates! Fresh news just arrived.

பாதுக்கை உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு தொடக்கம் 12 மணிநே...

News

பாதுக்கை உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு தொடக்கம் 12 மணிநேர நீர்வெட்டு!

April 5, 2026 1:20 pm
பாதுக்கை உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு தொடக்கம் 12 மணிநேர நீர்வெட்டு!
பாதுக்கை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (05) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் லபுகம மற்றும் களுதுவாவ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், அவற்றின் உற்பத்தித் திறன் வரையறுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (05) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now