22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வ...
News
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்தில் உள்ள முக்கிய சாரம்சங்கள் வருமாறு:
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம்:
அரசியலமைப்பின் 107(5) உறுப்புரையைத் திருத்துவதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியின் ஓய்வுக் காலம்:
பிரதம நீதியரசர் (தலைமை நீதிபதி) 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் — இதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் ஓய்வுபெற வேண்டும்.
அரசியலமைப்பு உறுப்புரை 137 இல் திருத்தம்:
அரசியலமைப்பின் 137வது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள "12 பேருக்கு மிகாமல்" எனும் சொல்லாடலுக்குப் பதிலாக "24 பேருக்கு மிகாமல்" எனத் திருத்தம் செய்யப்படுகிறது.
இச்சட்டமூலத்தில் உள்ள முக்கிய சாரம்சங்கள் வருமாறு:
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம்:
அரசியலமைப்பின் 107(5) உறுப்புரையைத் திருத்துவதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியின் ஓய்வுக் காலம்:
பிரதம நீதியரசர் (தலைமை நீதிபதி) 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் — இதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் ஓய்வுபெற வேண்டும்.
அரசியலமைப்பு உறுப்புரை 137 இல் திருத்தம்:
அரசியலமைப்பின் 137வது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள "12 பேருக்கு மிகாமல்" எனும் சொல்லாடலுக்குப் பதிலாக "24 பேருக்கு மிகாமல்" எனத் திருத்தம் செய்யப்படுகிறது.