இ.போ.ச பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் மருத்துவமனையில் அனுமத...
இ.போ.ச பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!
ஹகுரன்கெத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மயிலாப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இன்று (11) பிற்பகல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்து கண்டி பொது வைத்தியசாலையிலும், ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, காயமடைந்தவர்களில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அடங்குவதுடன் விபத்துக்கான காரணம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.