New Updates! Fresh news just arrived.

'ஐஸ்' போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் திருக்கோவ...

News

'ஐஸ்' போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது!

September 12, 2026 6:48 pm
'ஐஸ்' போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது!
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இத்திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை (11) மாலை முன்னெடுக்கப்பட்டது.

திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த இச்சோதனையின்போது, சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சான்றுப்பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now