யாழில் பெருமளவான கோடாவுடன் சந்தேகநபர் கைது!
யாழில் பெருமளவான கோடாவுடன் சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம் - ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு தயாரிப்பதற்காக வைத்திருந்த கோடாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறித்த கைது நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகளினை மேற்கொண்ட பின்னர் அவரினை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்