யாழில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!
யாழில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!
யாழில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (18.11.2025) யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்