New Updates! Fresh news just arrived.

ஹெரோயினுடன் கைதான அதிபர் மீண்டும் விளக்கமறியலில்!

News

ஹெரோயினுடன் கைதான அதிபர் மீண்டும் விளக்கமறியலில்!

November 26, 2025 10:23 am
ஹெரோயினுடன் கைதான அதிபர் மீண்டும் விளக்கமறியலில்!

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





இதன்படி, கடந்த (05) ஆம் திகதி அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோவிற்கும் அதிகளவான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.





இந்நிலையில் குறித்த அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகின்ற எப்பாவல, எதகல பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்ட இந்த 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.





இதற்கு மேலதிகமாக, குறித்த அதிபரால் அருகிலுள்ள குளமொன்றில் வீசப்பட்டிருந்த, போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு ஒன்றும், பொலித்தீன் சீலர் இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.






https://youtu.be/sNuROsmXKME?si=IH7WXDUjYH3AUrtS

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now