மாற்றுத்திறனாளிகளின் சமூகமயமாக்கலில் சமூக ஊடகங்களின் புரட...
மாற்றுத்திறனாளிகளின் சமூகமயமாக்கலில் சமூக ஊடகங்களின் புரட்சிகர பங்கு
மனிதன் ஒரு சமூக விலங்காகக் கருதப்படுகிறான். சமூகத்துடன் தொடர்புகொள்ளும் திறன் அவனது வாழ்க்கையின் அடிப்படை கூறாகும். ஆனால் சிலநேரங்களில் உடல், அறிவு அல்லது உணர்ச்சி சார்ந்த குறைபாடுகளால் சிலர் சமூகத்தில் பங்கேற்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
எனவே ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டின் கருத்துப்படி மாற்றுத்திறனாளிகள் என்போர் நீண்டகாலமாக நீடிக்கும் உடல், உள அறிவுசார் அல்லது புலன் குறைபாடுகளைக் கொண்டவர்கள் இந்த குறைபாடுகள் அணுகு
முறைகளிலும் சுற்றுச்சூழலிலும் உள்ள பல்வேறு தடைகளுடன் சேர்ந்து மற்றவர்களுடன் இணையாக சமூகத்தில் முழுமையாகவும் திறம்படவும் பங்கேற்பதை தடுக்கக் கூடியவர்களைக் குறிக்கின்றது.
மாற்றுத்திறனாளிகளின் சமூகமயமாக்கத்திற்குச் சமூக ஊடகங்கள் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் பயனுள்ள கருவியாக விளங்குகின்றன. சமூக ஊடகங்கள் என்பது இணையத்தின் மூலம் மனிதர்கள் தகவலைப் பகிர்ந்து கொள்ளவும் உரையாடவும், கருத்துக்களை பரிமாறவும் மற்றும் உலகம் முழுவதும் தொடர்புகளை
அமைக்கும் மையமாகவும் செயற்படுகிறது.
Facebook, Instagram, WhatsApp, YouTube, Tik-Tok, Telegram, X (Twitter) போன்ற தளங்கள் மனிதர்களின் தினசரி வாழ்வில் ஒரு பகுதியாகிவிட்டன.
இவை தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாது கல்வி, வணிகம், கலாச்சாரம், அரசியல், மனநலம் போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்காக இவை சமூகத்தொடர்பு, கல்வி, ஊக்கம், தன்னம்பிக்கை வளர்ச்சி மற்றும் சமூக அங்கீகாரம் பெறும் வாய்ப்புக்களையும் உருவாக்குகின்றன. பாரம்பரிய சமூகத் தடைகள் மற்றும் உடல் ரீதியான சவால்களைக் கடந்து இந்த சமூக ஊடகங்கள் அவர்களுக்கு பல வழிகளில் உதவுகின்றன.
அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது ஒருவரை சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றும் செயல் இதன் மூலம் ஒருவர் சமூகத்தின் மதிப்புக்கள், நெறிமுறைகள், கலாச்சாரம், மற்றும் நடத்தை முறைகளை கற்றுக்கொள்கிறார். இந்தச் செயல்முறையானது குடும்பம், கல்வி நிறுவனம், ஊடகம்,
மதம், நண்பர்கள் போன்ற பல வழிகளில் நடைபெறுகிறது.
மாற்றுத் திறனாளிகளின் சமூகத்தொடர்பை அதிகரிப்பதற்காக அவர்களின் தனிமையை நீக்க உடல்ரீதியான நடமாட்டக் கட்டுப்பாடுகளால் அல்லது சமூகத்தின் அணுகல் குறைபாடுகளால் உருவாகும் தனிமையை போக்க சமூக ஊடகங்கள் உதவுகின்றன. மாற்றுத்
திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள உறவுகளுடன் தொடர்பில் இருக்க முடிகிறது. ஒரே மாதிரியான ஊனமுற்றோருடன் அல்லது சவால்களை எதிர்கொள்பவர்களுடன் இணையவும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் பரஸ்பர ஆதரவை வழங்கவும் Facebook, X (Twitter), Instagram, YouTube போன்ற தளங்கள் வாய்ப்பளிக்கின்றன.
இது மற்றவர்களுடன் சேர்ந்திருக்கும் உணர்வை வளர்க்கிறது.
நேருக்குநேர் தொடர்பு கொள்வதில் உள்ள தயக்கம் அல்லது சிரமங்களை சமூக ஊடகங்கள்
அகற்றுகின்றன. மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய விருப்பத்தின்படி மற்றவர்களுடன் உரையாடவும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தவும் இவை உதவுகின்றன. உடல் சார் குறைபாடுகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறமுடியாதவர்களுக்கு சமூக ஊடகங்கள் உலகத்துடன் இணைக்கும் பாலமாகச் செயல்படுகின்றன.
மெக்சிகன் (Mexican) பல்கலைக்
கழகத்தின் ஓர் ஆய்வின் படி மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைபாடு இல்லாதவர்களைக் காட்டிலும் அதிக நோக்கங்களுக்காகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது.
அவர்கள் வெறும் உறவுகளைப் பேணுவதுடன் மட்டுமல்லாமல் புதிய உறவுகளை உருவாக்கவும் மற்றும் நிகழ்நிலை சமூகங்களில் தீவிரமாகப் பங்கேற்கவும் சமூக ஊடகங்களை நம்பியுள்ளனர். சமூக ஊடகங்கள் தற்போது “மக்களை இணைக்கும் வலை” மட்டுமல்லாது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாகவும் திகழ்கின்றன.
பார்வைக் குறைபாடு உடையோர் “Voice Chat” அல்லது Screen Reader வழியாக இணைகிறார்கள்.
செவிப்புலனற்றோர் “Sign Language Video" வழியாக கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். உடல் இயக்கக் குறைபாடுகள் உள்ளவர்கள் “Video Conferencing” மூலம் உலகுடன் தொடர்பில் இருக்கிறார்கள் இதன் ஊடாக அவர்கள் சமூகமயமாக்கத்திற்கு உட்படுகிறார்கள். அத்தோடு அவர்கள் தனிமையிலிருந்து வெளிவந்து சமூகவட்டத்துடன் இணைகிறார்கள்.
YouTube, Coursera, Khan Academy, Udemy போன்ற தளங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி வீடியோக்களையும் திறன் பயிற்சிகளையும் வழங்குகின்றன.
இது அவர்களை கல்வி மற்றும் தொழில் ரீதியாக வலுப்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் பல ஆதரவு குழுக்கள் இயங்குகின்றன. இத்தகைய குழுக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மனநிலை ஆதரவையும் தகவல் பகிர்வையும் வழங்குகின்றன. உதாரணமாக “Enable Lanka Foundation, Srilanka Council for the Blind" போன்ற அமைப்புக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குகின்றன.
சமூக ஊடகங்கள் வழியாக பலர் தங்கள் வாழ்க்கைச் சவால்களைவென்று முன்னேறிய கதைகளை பகிர்கின்றனர். இதுபோன்ற கதைகள் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் ஊக்கமாக மாறுகின்றன. மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளை கோருவதற்கு சமூக ஊடகங்கள் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாகும். பல மாற்றுத்திறனாளிகள் கலை, இசை, கவிதை, ஓவியம்