மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு கல்முனை அனைத்துப் பள்ளிவ...
மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!
சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (10) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா, பொது நிறுவனங்கள் சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், ஊர் மக்கள் ஆகியோரின் பங்களிப்பில் கல்முனை அனர்த்த நிவாரண முகாமைத்துவ பணிமனையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இங்கு 450 குடும்பங்களுக்குகுறித்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)