ரயில் சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி!
ரயில் சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி!
இலங்கை ரயில் சேவையிலுள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களினை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவையானது அனுமதி வழங்கி இருப்பதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இலங்கை ரயில் சேவையினுடைய ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதினை தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலினை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி குறித்த அறிவிப்பை விடுத்தார்.