New Updates! Fresh news just arrived.

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்!

News

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்!

December 13, 2025 11:34 am
அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.





பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இந்தச் சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இந்த முற்பணம் வழங்கப்படுவது வழக்கமாகும்.





இதன்படி, 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத இம்முற்பணக் கொடுப்பனவானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தின் இறுதித் தினத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த முற்பணத் தொகையானது 8 சதவீத வருடாந்த வட்டியோடு, 10 சமமான மாதத் தவணைகளில் அறவிடப்பட வேண்டும் என்றும் பொதுநிர்வாக அமைச்சினுடைய செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






https://youtu.be/TqV65oMmxAo?si=3Cjxx8WPh8sLwpm-

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now