New Updates! Fresh news just arrived.

முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்...

News

முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும்!

December 17, 2025 2:13 pm
முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும்!

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி அமைச்சின் கீழ் முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை (16) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.





குறித்த நிகழ்வில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு முன்பள்ளி பாடசாலைகளுக்கான ஒதுக்கீட்டு கடிதங்களினை வழங்கி வைத்தார்.





இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன் பள்ளி பாடசாலைகளின் தவிசாளர் அமினுதீன், அம்பாரை மாவட்ட முன்பள்ளி பாடசாலைகளின் பணிப்பாளர் நிசாந்த குமார, அதன் உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர், அதன் உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





(எம்.எஸ்.எம்.ஸாகிர்)






https://youtu.be/vZthDa5DBLU?si=K-vj2hPZBnpXC8wG

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now