கட்டுப்பாட்டை இழந்ததால் மோட்டார்சைக்கிள் விபத்து: இளைஞர் ...
கட்டுப்பாட்டை இழந்ததால் மோட்டார்சைக்கிள் விபத்து: இளைஞர் ஸ்தலத்தில் உயிரிழப்பு!
புத்தூர் பிரதேச சபைக்கு அருகில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆவரங்கால் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த ஜெகநாதன் வினோஜன் (வயது -25) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் இருவர் பயணித்த நிலை யில், வீதி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் தலைக்கவசம் அணியாத நிலையில், தலையில் படுகாய மடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பு.கஜிந்தன்