யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
நேற்றிரவு, நல்லூர் மூத்தநயினார் வீதி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் 2 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகளினை மேற்கொண்ட பின்னர் அவரினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்