சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டாலும் மண்சரிவு அபாயம் நீங்க...
சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டாலும் மண்சரிவு அபாயம் நீங்கவில்லை!
மண்சரிவு தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், அந்த இடங்களில் இன்னும் ஆபத்து நீங்கவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது தெரிவித்துள்ளது.
மழை நிலைமை குறைவடைந்துள்ளதன் காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் வந்து குறித்த ஆபத்தான இடங்களினை பரிசோதிக்கும் வரை பொதுமக்கள் குறித்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அந்த அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி ஹசலி சேமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.