பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத...
பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்திற்கு கண்டனத் தீர்மானம்!
பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலமையில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
இன்றைய அமர்வில் இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
இன்றைய அமர்வில் 2026ஆம் ஆண்டு நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் அண்மையில் தையிட்டில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பு.கஜிந்தன்