New Updates! Fresh news just arrived.

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி...

News

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு: அமைச்சர் சந்திரசேகரன்!

December 26, 2025 2:17 pm
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு: அமைச்சர் சந்திரசேகரன்!

தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.





அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,





தையிட்டி திஸ்ஸ விகாரையானது தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதினை நாம் ஏற்கின்றோம். ஆனால் குறித்த விகாரையானது எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதுவும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.





இருந்தபோதிலும், அரசாங்கம் என்கின்ற வகையில் குறித்த பிரச்சினையினை நீடிக்காமல் முடிறுத்துவதற்கே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளினை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளினை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக் கேற்ற அவர்களுக்கான இழப்பீடுகளினை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு.





இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளினை வழங்குவதற்கு கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கின்றது என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சனையினை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கின்றார்கள்.





நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.





ஆகவே அரசாங்கம் திடமான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே என அமைச்சர் அவர் மேலும் தெரிவித்தார்.





பு.கஜிந்தன்






https://youtu.be/dIYzK0VkcfY?si=adTTrQwhbvIaIHD_

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now