New Updates! Fresh news just arrived.

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

News

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

April 17, 2026 4:39 pm
யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டு பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகளின் மீது நேற்றுமுன்தினம் இரவு (15) தாக்குதலானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடைமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக அங்கிருப்பவர்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரினை உடனடியாக கைது செய்யுமாறு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now