New Updates! Fresh news just arrived.

ஏர்பஸ் விவகாரம்: பிரதிவாதிகள் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்ப...

News

ஏர்பஸ் விவகாரம்: பிரதிவாதிகள் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!

March 24, 2026 1:45 pm
ஏர்பஸ் விவகாரம்: பிரதிவாதிகள் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!
எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள அதன் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி மற்றும் ஷமீந்திர ராஜபக்ச ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவு ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now