New Updates! Fresh news just arrived.

"அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும்" ஆய்வு...

News

"அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும்" ஆய்வு நூல் வெளியீடு!

May 7, 2026 8:49 pm
"அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும்"  ஆய்வு நூல் வெளியீடு!
நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளரான சட்டத்தரணி ஏ. எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்கள் கடந்த புதன்கிழமை(6) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 'அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும் ' எனும் தொனிப் பொருளில் ஆய்வு நூல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை மற்றும் காணி சமபங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சட்டத்தரணி ஆஷிக் அலியார் மற்றும் சட்டத்தரணி சர்ஜுன் ஜமால்தீன் இணைந்து எழுதிய 'அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும்' எனும் தொனிப் பொருளில் ஆய்வு நூல் எழுதப்பட்டமை ஆகும்.

இந்த நூல்இ அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை, காணி சமபங்கு, முஸ்லிம்இசிங்கள மற்றும் தமிழ் கிராமங்களில் காணி ஒதுக்கீட்டில் நிலவும் பிரச்சினைகள், வரலாற்றுப் பின்னணி, மற்றும் தீர்வுக்கான பரிந்துரைகள் குறித்து ஆழமான ஆய்வாக எழுதப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now