New Updates! Fresh news just arrived.

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொ...

News

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக அறிவித்தல்!

May 31, 2026 4:46 pm
யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக அறிவித்தல்!
திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நாளை திங்கட்கிழமை (01) ஆரம்பமாகவுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி செவ்வாய் (02) மற்றும் புதன்கிழமை (03) இரு நாட்களும் ஒரு வழி பாதையாக மாற்றி அமைக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் திருநெல்வேலி சந்தியில் இருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக வாகனங்கள் உச்செல்ல முடியாது என்பதனை மன வருத்தத்துடன் அறியத் தருகின்றேன் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதி புனரமைப்பு பணிகளால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு குறித்த வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு பகல் நேரங்களில் வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்குவதனை தவிர்த்து இரவு நேரங்களில் பொருட்களை இறக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் குறித்த பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now