New Updates! Fresh news just arrived.

ஞானசார தேரருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக...

News

ஞானசார தேரருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு!

March 11, 2026 8:32 pm
ஞானசார தேரருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு!
2014ம் ஆண்டு காலப்பகுதியில் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கை மேல் நீதிமன்றதில் ஞானசாரதேரருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாரு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்

இதன்படி இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 291ன் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

பாதிக்கப்ட்டவர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டதரணி சிராஸ் நூர்தீன் மற்றும் அவரது வழிகாட்டுதளின் கீழ் சட்டதரணிகளான எம்.கே.எம்.பfர்சான்,சப்ராஸ் மொஹமட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு ஞானசார தேரர் பகிரங்கமாக தனக்கு இன்னும் பல வழக்குகள் இருப்பதாகவும், தனக்கெதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருப்பதாகவும் ,தனது எதிரிக்கு கூட இவ்வாறான நிலைமை வரக்கூடாதென்றும்,தனது வழக்குச் செலவுக்கு ஒருவர் நூறு ரூபாவது தனக்கு தருமாரு கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now