New Updates! Fresh news just arrived.

துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

News

துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

January 25, 2026 10:10 am
துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!
அம்பலாங்கொடை - வதுகெதர பகுதியில் உள்ள வீடொன்றினுடைய அறைக்குள் மிகவும் சூட்சுமமான் முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ வகை கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாவோடு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்டவர் வதுகெதர பகுதியினை சேர்ந்த 33 வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த, சந்தேகநபர் இந்த ஆயுதத்தினை மற்றொரு தரப்பினருக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடான், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now