New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

News

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

January 9, 2026 1:34 pm
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தோடு, தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now