New Updates! Fresh news just arrived.

இரு பெண்களின் சடலங்கள் மீட்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப...

News

இரு பெண்களின் சடலங்கள் மீட்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்புவிப்பு!

July 25, 2026 1:12 pm
இரு பெண்களின் சடலங்கள் மீட்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்புவிப்பு!
அம்பாறை மாவட்டத்தினுடைய இரு வேறு பிரதேசங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட இரு பெண்களினுடைய சடலங்களும் மரண விசாரணைகளைத் தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடக தெரிவிக்கப்பட்ட விமர்சனத்தினை தொடர்ந்து மருதமுனை சம்பவத்தில் தீவிர விசாரணைகலந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, மருதமுனை-6 ஆம் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய திருமணமாகாத பெண்னொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை வேளையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதினைத் தொடர்ந்து, குறித்த உயிரிழப்புத் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் , விமர்சனங்களும் பரவியதினையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளினை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் மரண விசாரணைகளினை மேற்கொண்டதோடு, உயிரிழந்த பெண்ணினுடைய மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு

அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பின் துல்லியமான காரணத்தினை கண்டறிவதற்காகச் சடலத்தின் சில உயிரியல் அவயங்கள் கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம் கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்மாந்துறையில் ஒரு பிள்ளையின் தாய் மரணம்

அத்தோடு, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஜீட்புரம் மல்வத்தை-03 பகுதியில் கடந்த வியாழக்கிழமை (23) மாலை 28 வயதுடைய ஒரு பிள்ளையினுடைய தாய் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதினைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்றத்தினுடைய நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணைகளானது நடத்தப்பட்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணினுடைய கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் மரணத்திற்கான பின்னணி தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்

பாறுக் ஷிஹான் (அம்பாறை நிருபர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now