New Updates! Fresh news just arrived.

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் ...

News

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி: வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றம்!

March 12, 2026 8:54 pm
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி: வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றம்!
அல்லைப்பிட்டியில் பொலிசரினுடைய துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளினை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றமானதுஉத்தரவிட்டுள்ளது

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த நிலையில் பொலிசாரினுடைய கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட டிருந்த துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளையினை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.

அதன்போது , உயிரிழந்த சிறுவனினுடைய குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னிளையாகி, சிறுவனினுடைய கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி , வழக்கு விசாரணைகளினை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் எனவும் மன்றில் சமர்ப்பணங்களினை முன் வைத்தனர்.

அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டதினால் கடுமையான வாத பிரதிவாதங்களினை அடுத்து விசாரணைகளினை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள், என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

அத்தோடு, இன்றைய வழக்கு விசாரணையின் போத , சம்பவத்தோடு தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாகவும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தோடு தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now