இலங்கையின் முக்கிய வங்கியில் பெரும்தொகை பணம் மோசடி - வாட...
News
இலங்கையின் முக்கிய வங்கியில் பெரும்தொகை பணம் மோசடி - வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank) தங்களது நிறுவனத்துக்குள் சில உள் பணியாளர்கள் மற்றும் வெளிப்புற நபர்கள் இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடி நடவடிக்கை ஒன்றை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, சுமார் 38 கோடி இலங்கை ரூபாய் அளவுக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது உள் மற்றும் வெளிப்புற விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், இழப்புகளை மீட்டெடுக்க அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் வைப்பு தொகைகள், கணக்கு இருப்புகள் அல்லது வங்கியின் நாளாந்த செயல்பாடுகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என வங்கி உறுதியளித்துள்ளது. அனைத்து நிதிகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும், சேவைகள் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி கூறியுள்ளது.
அதேவேளை, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்பாமல் இருக்க பொதுமக்களிடம் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் அருகிலுள்ள கிளை, அழைப்பு மையம் அல்லது உறவுநிலை மேலாளரை தொடர்பு கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி தனது வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்தும் காக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, சுமார் 38 கோடி இலங்கை ரூபாய் அளவுக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது உள் மற்றும் வெளிப்புற விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், இழப்புகளை மீட்டெடுக்க அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் வைப்பு தொகைகள், கணக்கு இருப்புகள் அல்லது வங்கியின் நாளாந்த செயல்பாடுகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என வங்கி உறுதியளித்துள்ளது. அனைத்து நிதிகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும், சேவைகள் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி கூறியுள்ளது.
அதேவேளை, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்பாமல் இருக்க பொதுமக்களிடம் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் அருகிலுள்ள கிளை, அழைப்பு மையம் அல்லது உறவுநிலை மேலாளரை தொடர்பு கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி தனது வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்தும் காக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.