New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வருக்கு எ...

News

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வருக்கு எதிரான வழக்கு: திகதி நிர்ணயம்!

January 13, 2026 1:50 pm
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வருக்கு எதிரான வழக்கு:  திகதி நிர்ணயம்!
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, மேலதிக விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக (Pre-trial conference) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முஹம்மட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குடன் தொடர்புடைய சில ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, குறித்த ஆவணங்களின் பிரதிகளினை பிரதிவாதி தரப்பினருக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களினை கருத்திற்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு முந்தைய மாநாட்டை அடுத்த தவணையில் நிறைவு செய்ய வேண்டும் எனவும் இரு தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, மேலதிக விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக குறித்த வழக்கை பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், முன்னாள் அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்லவினுடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய போது, 27 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களினை முறையற்ற விதத்தில் ஈட்டியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இந்த குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now