கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
News
கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி முஹம்மட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களினை பரிசீலித்த நீதிபதி, வழக்கை மீண்டும் எதிர்வருகின்ற பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தனது தனிப்பட்ட ஊழியர் குழாமில் வெளி நபர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தனது வங்கிக் கணக்குகளில் வரவு வைத்ததன் மூலம் 'ஊழல்' செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
இந்தச் சந்தேகநபர்களுக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி முஹம்மட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களினை பரிசீலித்த நீதிபதி, வழக்கை மீண்டும் எதிர்வருகின்ற பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தனது தனிப்பட்ட ஊழியர் குழாமில் வெளி நபர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தனது வங்கிக் கணக்குகளில் வரவு வைத்ததன் மூலம் 'ஊழல்' செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
இந்தச் சந்தேகநபர்களுக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.