New Updates! Fresh news just arrived.

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் விடுத்துள்ள...

News

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

April 23, 2026 1:43 pm
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபரனா சுவந்துருகொட முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில், பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கை மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் ரக்பி விளையாட்டினை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவினைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரினால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கினை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now