நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள...
News
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்: சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை!
நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனினுடைய இருக்கையை மாற்றுவதற்றுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினரான அர்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியில் என்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளினால் திட்டியும், வன்முறை அச்சுறுத்தல் விடுத்தும், இழிவான சொற்களினை பயன்படுத்தியும் வருகின்றார்.
சமீப காலமாக இந்த நடத்தையானது எந்த அளவிற்கு மோசமடைந்துள்ளது என்றால், அது என் கவனத்தினை சிதறடிப்பதால், பாராளுமன்ற அவையில் அவரை எனக்கு அருகில் அமர வைப்பது எனக்கு இயலாத காரியமாகியுள்ளது.
குறித்த அந்த உறுப்பினர், ஒரு சுயேச்சைக் குழுவில் இருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இந்நிலையில், குறித்த உறுப்பினருக்கு அனைத்து மூத்த தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினுடைய உறுப்பினர்களுக்கு இருக்கை வழங்கப்படும் இடத்தில், வழக்கமான நடைமுறையை மீறி, குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பிறகு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களினை அமர வைக்கும் வழக்கமான நடைமுறைக்கு இணங்க, குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரினை என்னிடம் இருந்து இடதுபுறமாக நகர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பு.கஜிந்தன்
இதன்படி, குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினரான அர்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியில் என்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளினால் திட்டியும், வன்முறை அச்சுறுத்தல் விடுத்தும், இழிவான சொற்களினை பயன்படுத்தியும் வருகின்றார்.
சமீப காலமாக இந்த நடத்தையானது எந்த அளவிற்கு மோசமடைந்துள்ளது என்றால், அது என் கவனத்தினை சிதறடிப்பதால், பாராளுமன்ற அவையில் அவரை எனக்கு அருகில் அமர வைப்பது எனக்கு இயலாத காரியமாகியுள்ளது.
குறித்த அந்த உறுப்பினர், ஒரு சுயேச்சைக் குழுவில் இருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இந்நிலையில், குறித்த உறுப்பினருக்கு அனைத்து மூத்த தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினுடைய உறுப்பினர்களுக்கு இருக்கை வழங்கப்படும் இடத்தில், வழக்கமான நடைமுறையை மீறி, குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பிறகு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களினை அமர வைக்கும் வழக்கமான நடைமுறைக்கு இணங்க, குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரினை என்னிடம் இருந்து இடதுபுறமாக நகர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பு.கஜிந்தன்