New Updates! Fresh news just arrived.

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது; விசாரணையில் வெளியான ...

News

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது; விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

April 16, 2026 3:35 pm
கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது; விசாரணையில் வெளியான முக்கிய தகவல்
இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 9 சீனப் பிரஜைகள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்த்தி நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து சுமார் 24 மில்லியன் ரூபாயிற்கும் அதிக மதிப்புள்ள மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இணையம் வாயிலாக நிதி மோசடிச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வானூர்தி நிலைய காவல்துறை பாதுகாப்புப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now