New Updates! Fresh news just arrived.

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்...

News

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள் போருதோட்டையில் ஆரம்பம்!

August 22, 2026 3:51 pm
42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள் போருதோட்டையில் ஆரம்பம்!
42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக நலன்புரி நிகழ்ச்சித் தொடர் இன்று (ஆகஸ்ட் 22) நீர்கொழும்பு, போருதோட்டைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமானது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவுத் தொடரின் ஆரம்ப நிகழ்வு, போருதோட்டை பிரதான ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களினுடைய தலைமையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரான முனீர் முளப்பர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரான சுகத் திலகரத்ன உள்ளிட்ட அழைப்பாளர்களினுடைய பங்களிப்புடன், அல்-பலாஹ் மகா வித்தியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமின் பணிகள் தொடர்பில் பார்வையிடப்பட்டது.

அவ்வேளையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, பேருவளையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லத்தீப் ஹாஜியார் அவர்களினால் அல்-பலாஹ் மகா வித்தியாலய மாணவச் செல்வங்களுக்காக நவீன ஸ்மார்ட் போர்ட் (Smart Board) இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள், நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள், மௌலவிமார்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now