New Updates! Fresh news just arrived.

பசுபிக் பெருங்கடலில் சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் வி...

News

பசுபிக் பெருங்கடலில் சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

August 3, 2026 9:44 pm
பசுபிக் பெருங்கடலில் சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
தற்போது நிலவும் மழை நிலைமை நாளை (04) நண்பகல் முதல் குறையுமென எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் உருவாகி வரும் சூறாவளி காரணமாக எதிர்வரும் ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதன்படி மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிகளவில் மழையை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now