New Updates! Fresh news just arrived.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் 'கிரிஷ்'...

News

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் 'கிரிஷ்' வழக்கிற்கு திகதி நிர்ணயம்!

July 7, 2026 4:41 pm
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் 'கிரிஷ்' வழக்கிற்கு திகதி நிர்ணயம்!
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபரண சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கில் தொடர்புடைய இரண்டு இந்தியப் பிரஜைகளான சாட்சிகளுக்கு, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறையின் கீழ் அழைப்பாணை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை விசாரணைக்காக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அழைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now