New Updates! Fresh news just arrived.

மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: ரஞ்சித் ஆண்டகை அறிவிப...

News

மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு!

August 10, 2026 6:13 pm
மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு!
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கடமைகளினை தவறவிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பில் தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைத் குறிப்பிட்பிட்டுள்ளார்.

மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாகவும், திருச்சபையின் போதனைகளின்படி எந்தவொரு மரண தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கார்டினல் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இலங்கை நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மீது தாம் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதன் தீர்மானங்களிலோ அல்லது விவாதங்களிலோ எந்த வகையிலும் தலையிட உத்தேசிக்கவில்லை என்றும் கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் விவாதச் சூழலில், கொழும்பு பேராயர் இல்லம் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதும், நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதும் கொழும்பு பேராயர் இல்லத்தின் தீவிர எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now