பிரதேச சபை தவிசாளருக்கு மரண அச்சுறுத்தல்: விசாரணைகளை ஆரம்...
News
பிரதேச சபை தவிசாளருக்கு மரண அச்சுறுத்தல்: விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்!
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தினை கொண்டுள்ள மில்லனிய பிரதேச சபையினுடைய தவிசாளர் ஜயதுங்க கமகே சமன் சுஜீவவுக்கு, அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்பின் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளினை ஆரம்பித்துள்ளதாக ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று (15) அதிகாலை 1.00 மணியளவில் நபர் ஒருவர் தவிசாளரினுடைய கைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டு, 'விடிவதற்குள் கொலை செய்துவிடுவதாக' அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர், தவிசாளர் உடனடியாகப் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தினை தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக, ஹொரணை தலைமையகப் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்குச் சென்று முறைப்பாட்டினை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மரண அச்சுறுத்தல் விடுத்த நபரினுடைய அடையாளத்தைக் கண்டறிவதற்காக, சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் அழைப்புப் பதிவுகள் தொடர்பில் தொழில்நுட்ப விசாரணைகளினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவிசாளரினுடைய பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளினை எடுப்பதற்கும் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளினை ஹொரணை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, இன்று (15) அதிகாலை 1.00 மணியளவில் நபர் ஒருவர் தவிசாளரினுடைய கைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டு, 'விடிவதற்குள் கொலை செய்துவிடுவதாக' அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர், தவிசாளர் உடனடியாகப் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தினை தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக, ஹொரணை தலைமையகப் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்குச் சென்று முறைப்பாட்டினை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மரண அச்சுறுத்தல் விடுத்த நபரினுடைய அடையாளத்தைக் கண்டறிவதற்காக, சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் அழைப்புப் பதிவுகள் தொடர்பில் தொழில்நுட்ப விசாரணைகளினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவிசாளரினுடைய பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளினை எடுப்பதற்கும் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளினை ஹொரணை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.