New Updates! Fresh news just arrived.

உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய சடலம் – புங்குடுதீவில்...

News

உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய சடலம் – புங்குடுதீவில் சம்பவம்!

August 26, 2026 2:01 pm
உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய சடலம் – புங்குடுதீவில் சம்பவம்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் இன்று (26) காலை அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழிலுக்காக கடற்கரைக்குச் சென்ற சிலர் சடலத்தை அவதானித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கரையொதுங்கிய சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், உயிரிழந்தவர் தொடர்பான அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலத்தை மீட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now