கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிருக்கே ஆபத்து
News
கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிருக்கே ஆபத்து
நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுற்றாடல் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல சிறிய ஏரிகளின் நீரைக் கொண்டு போஷிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட கிரகரி வாவி, தற்போது மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுவதாகத் அவர் சுட்டிக்காட்டினார்.
காலப்போக்கில் அந்தச் சிறிய ஏரிகள் தூர்ந்து போனதன் காரணமாக, மலையகப் பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், உரங்கள், பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் கிரகரி வாவியில் கலந்து அதன் நீரின் தன்மை அபாயகரமான முறையில் மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, சாதாரண நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவு 0.20 மில்லிகிராமாக இருந்தாலும், கிரகரி வாவியின் நீரில் அது 1.04 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளது.
மேலும், பொதுவாக 0.50 மில்லிகிராமாக இருக்க வேண்டிய நைதரசன் அளவு 3.70 மில்லிகிராம் வரையிலும், உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை 9.72 மில்லிகிராம் வரையிலும் அதிகரித்துள்ளது.
இது மனித உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு தீவிர மாற்றமாகும்.
இந்த நெருக்கடியான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டுக்குழுவின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுற்றாடல் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல சிறிய ஏரிகளின் நீரைக் கொண்டு போஷிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட கிரகரி வாவி, தற்போது மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுவதாகத் அவர் சுட்டிக்காட்டினார்.
காலப்போக்கில் அந்தச் சிறிய ஏரிகள் தூர்ந்து போனதன் காரணமாக, மலையகப் பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், உரங்கள், பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் கிரகரி வாவியில் கலந்து அதன் நீரின் தன்மை அபாயகரமான முறையில் மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, சாதாரண நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவு 0.20 மில்லிகிராமாக இருந்தாலும், கிரகரி வாவியின் நீரில் அது 1.04 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளது.
மேலும், பொதுவாக 0.50 மில்லிகிராமாக இருக்க வேண்டிய நைதரசன் அளவு 3.70 மில்லிகிராம் வரையிலும், உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை 9.72 மில்லிகிராம் வரையிலும் அதிகரித்துள்ளது.
இது மனித உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு தீவிர மாற்றமாகும்.
இந்த நெருக்கடியான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டுக்குழுவின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் தெரிவித்தார்.