மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
News
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டததோடு, இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 3,700 பேர் மரணித்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாகவே வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 9.36 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.
121 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந் நிலநடுக்கம், 23.437 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.737 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்குமென முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
முன்னதாக, மியான்மரில் கடந்த 22 ஆம் திகதி காலை ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாகவே வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 9.36 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.
121 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந் நிலநடுக்கம், 23.437 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.737 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்குமென முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
முன்னதாக, மியான்மரில் கடந்த 22 ஆம் திகதி காலை ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.