New Updates! Fresh news just arrived.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சூத்திரதாரியை கண்டறிந்த கம்மன்...

News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சூத்திரதாரியை கண்டறிந்த கம்மன்பில!

March 16, 2026 12:33 pm
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சூத்திரதாரியை கண்டறிந்த கம்மன்பில!
அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை வருட காலம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி' எனும் ஆய்வு நூலைத் தாம் தயாரித்துள்ளதாகவும், அதனை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி மாலை 3:30 மணிக்கு வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த 7 வருடங்களாக விற்பனை செய்யப்பட்டது. இதை வைத்து அரசாங்கங்களானது அமைக்கப்பட்டன, கலைக்கப்பட்டன. எந்தவொரு அடிப்படையும் இன்றி இராணுவத்தினரினை துன்புறுத்த குறித்த தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now