New Updates! Fresh news just arrived.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வெளி...

News

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வெளியான அவசர அறிவிப்பு

May 23, 2026 10:58 am
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வெளியான அவசர அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் விமானப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெள்ள அபாயத்திற்கு முகம் கொடுத்துள்ளதுடன், விமான நிலையத்திற்கு செல்லும் பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.

இதனால், விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது விமானப் பயண நேரத்திற்கு சுமார் 04 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்காக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை இயன்றளவு பயன்படுத்துமாறு விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நய்கந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கோவின்ன பகுதியும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now