கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவு...
News
கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார, ஒரே காலத்தில் இரண்டு அரச நிறுவனங்களில் சம்பளம் பெற்று நிதியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஜூன் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார, ஒரே காலத்தில் இரண்டு அரச நிறுவனங்களில் சம்பளம் பெற்று நிதியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஜூன் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.