புத்தாண்டு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் சிறைக்கைதிகளைச் சந்தி...
News
புத்தாண்டு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் சிறைக்கைதிகளைச் சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி!
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைத் திறந்த நிலையில் சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (13) மற்றும் நாளை (14) ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஊடகப் பேச்சாளரும் சிறைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, சிறைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அனைத்து சிறைகளிலும் இந்த சிறப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது.
கைதிகளின் உறவினர்கள், ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் உணவு அல்லது இனிப்புகள் அடங்கிய ஒரு பொட்டலத்தையும், சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொட்டலத்தையும் வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என சிறைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் தெரிவித்தார்.
இன்று (13) மற்றும் நாளை (14) ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஊடகப் பேச்சாளரும் சிறைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, சிறைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அனைத்து சிறைகளிலும் இந்த சிறப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது.
கைதிகளின் உறவினர்கள், ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் உணவு அல்லது இனிப்புகள் அடங்கிய ஒரு பொட்டலத்தையும், சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொட்டலத்தையும் வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என சிறைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் தெரிவித்தார்.